For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

முதல் நாளில் மாஸ் காட்டும் கேப்டன் மில்லர் | தனுசை சந்தித்து வாழ்த்து கூறிய தயாரிப்பாளர்...!

10:02 PM Jan 12, 2024 IST | Web Editor
முதல் நாளில் மாஸ் காட்டும் கேப்டன் மில்லர்   தனுசை சந்தித்து வாழ்த்து கூறிய தயாரிப்பாளர்
Advertisement

கேப்டன் மில்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தின் தயாரிப்பாளர் தியாகராஜன் நாயகன் தனுசை சந்தித்து வாழ்த்து கூறினார்.

Advertisement

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியான தனுஷின் படம் கேப்டன் மில்லர். வாத்தி படத்துக்கு பிறகு மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இந்த படத்தை ஆக்‌ஷன் படமாக இயக்குநர் அருண் மாதேஸ்வரன் தந்திருக்கிறார். படத்துக்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், நிவேதா உள்ளிட்ட இந்த படமும் ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் நிறைந்த ஒரு படமாகதான் வெளிவந்து இருக்கிறது.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படம் முதலில் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் ஒரே பாகம்தான் என்று கூறப்படுகிறது. ஆனால் மூன்று மணி நேரத்துக்கு மேல் படத்தின் நீளம் குறைக்கப்பட்டதாகவும், இந்த படம் பெரிய வெற்றி என்றால், மீதி காட்சிகளை வைத்து 2ம் பாகம் வெளியாகவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் முதல் காட்சியில் படத்தை பார்த்த ரசிகர்கள் படம் சிறப்பாக உள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த படம் முதல் நாள் வசூலில் முதலிடம் பிடிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கொண்டாடும் விதமாக படத்தின் தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன் நடிகர் தனுஷை நேரில் சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்தினார். இது குறித்த புகைப்படத்தை படத்தின் தயாரிப்பு நிறுவனமான 'சத்ய ஜோதி பிலிம்ஸ்' தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

அந்த பதிவில், 'வின்னர் வின்னர் கேப்டன் மில்லர்... உலகம் முழுவதும் இந்த பிளாக்பஸ்டர் வரவேற்பை கொடுத்த ரசிகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் நன்றி' என்று தெரிவித்துள்ளனர்.

Advertisement