Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மனைவி காரில் கஞ்சா செடி - போலீஸில் மாட்டிவிட கணவர் செய்த காரியம் #CCTV மூலம் அம்பலம்!

04:45 PM Aug 31, 2024 IST | Web Editor
Advertisement

தனது மனைவியை போலீஸில் மாட்டிவிட அவரது காரில் கஞ்சா வைத்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் எங்கே நடந்தது என்பது குறித்து விரிவாக காணலாம்

Advertisement

பொதுவாக தங்களுக்கு பிடிக்காத மனிதர்களை வம்பில் மாட்டிவிட வேண்டி ஒரு செயலைச் செய்து அதன் மூலம் சந்தோசம் அடைகிற அல்லது பலன் அடைகிற நபர்களை நாம் பார்த்திருக்கிறோம். குடும்பம், உறவுகள், நண்பர்கள், வேண்டப்பட்டவர்கள், எதிரிகள் என தனது தொடர்பில் இருக்கும் நபர்களிடம் இப்படி பழிவாங்கும் நபர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இதேபோல ஒரு சம்பவம்தான் சிங்கப்பூரில் நடைபெற்றுள்ளது.

சிங்கப்பூரில் நாட்டில் வசிக்கும் 37 வயதான டான் சியாங்லாங் என்கிற நபருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதன் பின்னர் தம்பதிகளிடையே மனக்கசப்பு ஏற்பட்டதால் ஒரு வருடத்திற்கு பிறகு தனது மனைவியை சியாங்லாங் பிரிந்தார். என்னதான் அவர்கள் இருவரும் மனரீதியாக பிரிந்தாலும் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெறவில்லை.

சிங்கப்பூர் நாட்டின் சட்டப்படி திருமணம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகியிருந்தால் மட்டும் தான் விவாகரத்து கோரமுடியும். இதனால் அவர்களால் விவாகரத்து பெற முடியவில்லை. சட்டத்தில் சில ஓட்டைகள் இருக்கின்றன என்கிற தமிழ்சினிமாவில் இடம்பெறுகிற வசனம் போல சிங்கப்பூர் சட்டத்திலும் சில தளர்வுகள் இருக்கின்றன. அது என்னவெனில் விவாகரத்து கோரும் தம்பதியினரில் யாராவது ஒருவரின் மேல் குற்ற வழக்கு இருந்தால் சீக்கிரம் விவாகரத்து பெறமுடியும்.

இதனை சாக்காக வைத்துக் கொண்ட சியாங்லாங் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து பெற வேண்டி ஒரு திட்டம் தீட்டியுள்ளான். அதாவது 500 கிராம் அளவிலான கஞ்சா செடிகளை வாங்கி மனைவிக்கு தெரியாமல் அவரது காரில் பின்புறம் நட்டு வைத்துள்ளார். இவற்றில் பாதி கஞ்சா செடிகள் நன்றாக வளர்ந்துள்ளது. சிங்கப்பூரில் போதைப்பொருட்கள் பயன்படுத்தினால் அதற்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்.

ஒருமுறை சியாங்லாங்கின் மனைவி காரை போலீசார் சோதனை செய்த போது போதைப்பொருட்களை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர். ஆனால் போலீசாரின் விசாரணையில் அவர் கஞ்சா வளர்த்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. அப்போது அவரது காரில் பொருத்தப்பட்டிருந்த கேமராவை ஆய்வு செய்த போது அவரின் கணவன் கஞ்சா செடிகள் நட்டத்தை போலீசார் கண்டுபிடித்தனர்.

தனது மனைவி போலீஸில் சிக்கிவிட்டார். அவருக்கு ஆயுள் தண்டனை கன்ஃபார்ம் என நினைத்து பகல் கனவு கண்டுகொண்டிருந்த கணவரை தேடி போலீசார் வரவே அதிர்ச்சியில் உறைந்தார் சியாங்லாங். இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். தற்போது இவருக்கு சுமார் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பபட்டது.

Tags :
ArrestCannabis PlantCrimeSingapore
Advertisement
Next Article