Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

குடியுரிமை திருத்தச் சட்டம் - விதிமுறைகள் கூறுவது என்ன?

10:28 AM Mar 12, 2024 IST | Web Editor
Advertisement

குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமலுக்கு வந்த நிலையில், சிஏஏ சட்டத்தின் விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

Advertisement

குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது தொடர்பான அறிவிப்பை அரசிதழில் உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது.  மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் கட்டாயம் அமல்படுத்தப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.  அதன்படி, விரைவில் மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில்,  மசோதா நிறைவேற்றப்பட்டு 4 ஆண்டுகள் கழித்து,  குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

கடந்த 2019 டிசம்பர் 11-ல் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.  குடியரசுத் தலைவர் 2019 டிசம்பர் 12-ல் ஒப்புதல் அளித்தார்.  இந்தச் சட்டமானது,  வங்கதேசம்,  பாகிஸ்தான்,  ஆப்கானிஸ்தானிலிருந்து 2014, டிசம்பா் 31-க்கு முன்னதாக இந்தியாவுக்கு வந்த முஸ்லிம்கள் அல்லாத மதச் சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்கிறது.  அதாவது இந்து,  கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள்,  சமணர்கள்,  பௌத்தர்கள்,  பார்சிகளுக்கு குடியுரிமை வழங்குகிறது.

இதையும் படியுங்கள் : குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசை கண்டித்து SDPI கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

இதையடுத்து, சிஏஏ விதிமுறைகளின் சில பின்வருமாறு :

Tags :
#CAABJPCAARulesCitizenshipAmendmentActIndianCitizenshipminoritiesUnionGovernment
Advertisement
Next Article