Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னையில் தொழிலதிபர்கள் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை..!

08:52 AM Mar 09, 2024 IST | Web Editor
Advertisement

சென்னையில் தொழிலதிபர்கள் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

கடந்த சில மாதங்களாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.  கடந்த மாதம் சென்னையில் உள்ள 10 மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தியது.

இந்நிலையில் இன்று சென்னையில், அபிராமபுரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் செல்வராஜ் என்பவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை வேப்பேரி ஈவிகே சம்பத் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடு ஒன்றிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதைப்போல, தேனாம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் தொழிலதிபர்கள் வீட்டில் சட்டவிரோத பண பரிமாற்ற புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags :
Chennaied raid
Advertisement
Next Article