பட்ஜெட் 2025 | எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி?
2025-26-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 8வது முறையாக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திருக்குறளுடன் பட்ஜெட் உரையை வாசித்தார்.
இதையும் படியுங்கள் : செல்போன், மின் வாகனங்கள் விலை குறைகிறது – பட்ஜெட்டில் வெளியான இனிப்பான அறிவிப்பு!
அப்போது அவர், விவசாயம், மருத்துவம் உள்ளிட்ட துறைகளுக்கான திட்டங்களை அறிவித்தார். வரி குறைப்பு, வரி அதிகரிப்பு குறித்தும் அவர் அறிவித்தார். மேலும், எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பது குறித்து அறிவித்தார். எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பது குறித்து பார்க்கலாம்.
எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி?
பாதுகாப்பு - 4.91 லட்சம் கோடி
ஊரக வளர்ச்சி - 2.66 லட்சம் கோடி
உள்துறைச் - 2.33 லட்சம் கோடி
விவசாயம் - 1.17 லட்சம் கோடி
கல்வி - 1.28 லட்சம் கோடி
மருத்துவம் - 98,311 கோடி
நகர்ப்புற வளர்ச்சி - 96,777 கோடி
தகவல் தொழில்நுட்பம் - 95,298 கோடி
ஆற்றல் - 81,174 கோடி
வர்த்தகம் - 65,553 கோடி
சமூக நலன் - 60,052 கோடி
அறிவியல் சார்ந்த துறைகள் - 55,679 கோடி