For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வந்தே பாரத், மெட்ரோ மற்றும் விமான நிலையங்கள் தொடர்பான புதிய அறிவிப்புகள் என்னென்ன?

12:52 PM Feb 01, 2024 IST | Web Editor
வந்தே பாரத்  மெட்ரோ மற்றும் விமான நிலையங்கள் தொடர்பான புதிய அறிவிப்புகள் என்னென்ன
Advertisement

வந்தே பாரத் ரயில்கள்,  மெட்ரோ மற்றும் விமான நிலையங்கள் விரிவாக்கம் தொடரும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Advertisement

மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மோடி அரசு தனது கடைசி பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தது.  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பதவிக்காலத்தின் ஆறாவது பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் உரையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசிக்கத் தொடங்கினார்.  நிர்மலா சீதாராமன் கூறுகையில்,  போக்குவரத்து துறையில் இந்தியா வேகம் பெறும்,  சுமார் 40 ஆயிரம் ரயில் பெட்டிகள் வந்தே பாரத் பெட்டிகளாக தரம் உயர்த்தப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இதனுடன்,  3 புதிய ரயில் வழித்தடங்கள் அமைக்கப்படும் என்றும்,  சரக்கு வழித்தடத்திற்கான பணிகளும் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.   வரும் நாட்களில்,  நாட்டின் பிற நகரங்களுடன்,  மெட்ரோ ரயில் மற்றும் நமோ பாரத் ரயில்களை அரசு இணைக்கும்.

கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் விமான நிலையங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.  அதன்படி நாட்டில் தற்போது 149 விமான நிலையங்கள் இயங்கி வருகின்றன என தெரிவித்தார்.

சுற்றுலா மையங்களை மேம்படுத்த மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்படும்.  இதற்கு மத்திய அரசு நிதியுதவி அளிக்கும்.  லட்சத்தீவு மற்றும் பிற தீவுகளில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க சிறப்பு வளர்ச்சி மேற்கொள்ளப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்தார்.

Advertisement