மாதவி பூரி புச் உள்பட 6 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க 4 வாரம் தடை - மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு!
இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை ஒழுங்குமுறை வாரியத்தின் (SEBI) தலைவராக பணியாற்றி வந்த மாதபி பூரி புச் மீது, ஹிண்டன்பர்க் அறிக்கையில் பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதில், அதானி குழுமம் வெளிநாடுகளில் உருவாக்கிய நிறுவனங்களில், மாதபி பூரி புச் மற்றும் அவரது கணவர் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வைத்திருந்தனர் என்று குற்றம் சாட்டப்பட்டது. இதன் காரணமாகவே அதானியின் சந்தேகத்துக்குரிய நிறுவனங்கள் மீது செபி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
மேலும், ஹிண்டன்பர்க்கின் முந்தைய அறிக்கை தொடர்பாக செபி நோட்டீஸ் அனுப்பி இருந்ததாகவும், அதற்கு பழிவாங்கும் நோக்கில் செபியின் பெயரை கெடுக்கும் வகையில் தற்போது ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது என்று மாதபி புரி மற்றும் அவரது கணவர் இருவரும் அறிக்கை வெளியிட்டிருந்தனர். மாதபி பூரி புச், விதிமுறைகளை மீறி ஐசிஐசிஐ வங்கியிடம் இருந்து ஊதியம் பெற்று வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. அவர், 2017-ம் ஆண்டு முதல் இதுவரை அவர் ரூ.16.8 கோடி பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதனிடையே, மாதவி பூரி புச்-க்கு எதிரான முறைகேடு புகார்கள் குறித்து நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு விசாரணையை தொடங்கியது. அவரிடம் விசாரிக்க பொதுக் கணக்குக் குழு சம்மன் அனுப்பியது. அதில், மாதபி பூரி புச் நேரில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதற்காக கடந்த அக்.24 அன்று பொதுக் கணக்கு குழு முன் செபி தலைவர் மாதபி பூரி புச் மற்றும் உறுப்பினர்கள் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்கள் ஆஜராகவில்லை.இந்த நிலையில் மும்பை, தானே பகுதியைச் சேர்ந்த பத்திரிகையாளர் சனப் ஸ்ரீவாஸ்தவ் என்பவர் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதில் '1992 ஆம் ஆண்டு SEBI சட்டம் மற்றும் அதன் ஒழுங்குமுறைகளின் கீழ் இணங்காமல் ஒழுங்குமுறை அதிகாரிகள் குறிப்பாக செபியின் ஒத்துழைப்புடன் பங்குச் சந்தையில் மோசடியில் ஈடுபட்டதாத தெரிவித்திருந்தார்.
மேலும், இதுகுறித்து பலமுறை காவல் நிலையம் மற்றும் சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறை அமைப்புகளை அணுகியும், அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தனது மனுவில் கூறி இருந்தார்.