For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நடுவானில் ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

12:37 PM Aug 22, 2024 IST | Web Editor
நடுவானில் ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
Advertisement

மும்பையிலிருந்து கேரளா வந்த ஏர் இந்தியா விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

மும்பையில் இருந்து கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு வந்த ஏர் இந்தியா விமானத்திற்கு இன்று காலை 7.30 மணிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக விமானி தெரிவித்துள்ளார். இதையடுத்து காலை 7.36 மணிக்கு விமான நிலையத்தில் முழு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

இருப்பினும் காலை 8 மணியளவில் 135 பயணிகளுடன் விமானம் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து காலை 8.44 மணியளவில் விமானத்தில் இருந்து பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் குறித்து விசாரணை நடப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ஏர் இந்தியா விமானம், தற்போது  விமான நிலையம் எப்போதும் போல செயல்பட்டு வருவதாகவும், விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
Advertisement