Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

டெல்லியில் 6 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்! பெற்றோர் பீதி...

10:59 AM May 01, 2024 IST | Web Editor
Advertisement

டெல்லியில் 6 பள்ளிகளுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.  

Advertisement

டெல்லியில் துவாரகா,  நொய்டா உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வரும் 6 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.  துவாரகா பப்ளிக் பள்ளி,  டெல்லி பப்ளிக் பள்ளி,  மதர் மேரிஸ் உள்ளிட்ட 6 பள்ளிகளுக்கு இன்று காலை 8.30 மணியளவில் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதனையடுத்து, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு பள்ளிக்கு வந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெளியேற்றப்பட்டனர்.  இது தொடர்பாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து,  மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.  இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
bomb threatDelhiE-mailSchools
Advertisement
Next Article