Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Gurugram வணிக வளாகத்தில் வெடிகுண்டு மிரட்டல்!

04:01 PM Aug 17, 2024 IST | Web Editor
Advertisement

குருகிராமில் உள்ள வணிக வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சல் வந்ததையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

குருகிராமில் உள்ள ஆம்பியன்ஸ் மாலுக்கு வந்திருந்த மிரட்டல் மின்னஞ்சலில், கட்டிடத்தில் உள்ள அனைவரையும் கொலை செய்வதற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் நாய் படைகள் சம்பவ இடத்திற்கு வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தன.

இது தொடர்பாக காவல்துறையினர் கூறியதாவது:

"ஆம்பியண்ஸ் வணிக நிறுவனத்திற்கு இன்று காலை 9.27 மணிக்கு வெடிகுண்டு மிரட்டல் குறித்து மின்னஞ்சல் வந்துள்ளது. இந்த மின்னஞ்சல் hiddenbones101@gmail மூலம் அனுப்பப்பட்டது. அதில், வணிக கட்டடத்தில் வெடிகுண்டு வைத்துள்ளேன். கட்டடத்திற்குள் இருக்கும் ஒவ்வொருவரும் கொல்லப்படுவீர்கள். யாரும் தப்பிக்க முடியாது. நான் என் வாழ்க்கையை வெறுத்ததால் கட்டடத்தில் வெடிகுண்டு வைத்துள்ளேன்.

இதையும் படியுங்கள் : #RainAlert | “தமிழ்நாட்டில் நாளை 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு” – வானிலை ஆய்வு மையம்!

இதுவரை தேடுதல் நடவடிக்கையில் சந்தேகத்திற்குரிய எதுவும் கிடைக்கவில்லை. வணிக வளாகத்தில் 70 சதவீதம் தேடுதல் நிறைவடைந்த நிலையில், இதுவரை எந்தவித சந்தேகத்திற்குரிய பொருளும் கிடைக்கவில்லை. எனவே பொதுமக்கள் பீதியடைய வேண்டும். இதுவரை, இதுபோன்ற மின்னஞ்சல்கள் மக்களைப் பயமுறுத்தும் புரளிகள் என கண்டறியப்பட்டு, அவற்றின் மூலத்தைக் கண்டறியும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது"

இவ்வாறு காவல்துறையினர் தெரிவித்தனர்.

Tags :
ambience mallBombDLF MallGurugrammallnoidaThreatuttar pradesh
Advertisement
Next Article