For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ரூ.10-க்கு #Biryani… அலைமோதிய வாடிக்கையாளர்கள் கூட்டம்!

03:00 PM Oct 04, 2024 IST | Web Editor
ரூ 10 க்கு  biryani… அலைமோதிய வாடிக்கையாளர்கள் கூட்டம்
Advertisement

ஆரணி அருகே புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையில் சிறப்பு சலுகையாக 10 ரூபாய்க்கு பிரியாணி வழங்கப்பட்டதால் பொதுமக்கள் முண்டியடித்து கொண்டு பிரியாணி வாங்கி சென்றனர்.

Advertisement

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மணிகூண்டு அருகே நந்தகுமார் என்பவர் பிரியாணி என்று புதியதாக பிரியாணி கடையை திறந்தார். இந்த கடை திறப்பு நாளான இன்று (அக்.4ம் தேதி) 100 ரூபாய் பிரியாணி 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று ஆரணி நகர் முழுவதும் நேற்று போஸ்டர் ஒட்டப்பட்டது.

இதையும் படியுங்கள் : பள்ளிகளில் பாஜகவின் திட்டங்கள் குறித்த போட்டி | மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. கண்டனம்!

இந்நிலையில் காலை திறப்பு விழா முடிந்த பின்பு 10 ரூபாய் பிரியாணி வாங்குவதற்காக பொதுமக்கள் காலையிலிருந்து அருகில் காத்துக் கொண்டிருந்தனர்.பின்னர் பொதுமக்கள் 10 ரூபாய் பிரியாணி வாங்குவதற்கு முண்டியடித்துக் கொண்டு சென்றதால் கடை உரிமையாளர் அனைவருக்கும் டோக்கன் வழங்கி வரிசையில் நிற்க வைத்து அனைவருக்கும் பிரியாணி வழங்கினர். பொதுமக்கள் புரட்டாசி மாதம் என்று கூட பாராமல் வரிசையில் நின்று 10 ரூபாய் பிரியாணியை வாங்கிக் கொண்டு சென்றனர்.

Tags :
Advertisement