For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பிறந்தநாள் ஸ்பெஷல்: தமிழ் திரையுலகில் இயக்குநர் வசந்த் நிகழ்த்திய அற்புதங்கள்!

10:41 AM Dec 14, 2023 IST | Web Editor
பிறந்தநாள் ஸ்பெஷல்  தமிழ் திரையுலகில் இயக்குநர் வசந்த் நிகழ்த்திய அற்புதங்கள்
Advertisement

தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர் வசந்த் இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார்.  தமிழ் சினிமாவில் வசந்த் நிகழ்த்திய அற்புதங்களை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

Advertisement

இயக்குநர் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குநராக சுமார் 18 படங்களில் பணியாற்றிய வசந்த்,  முதன் முதலாக இயக்கிய படம் கேளடி கண்மணி.  இன்றும் இசைப்பிரியர்களின் ப்ளே லிஸ்டில் விரும்பிக் கேட்கப்படும் பாடல்கள் நிறைந்த அந்த படத்தின் நாயகன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.

மக்களின் இதயங்களில் தலைசிறந்த பாடகராக அரியணை போட்டு அமர்ந்திருக்கும் எஸ்.பி.பி., 1990 ஆம் ஆண்டிற்கு முன் ஒரு தமிழ் படத்தில் சிறு வேடத்தில் தோன்றியிருந்தாலும் அவரை நாயகனாக யாரும் யோசித்திருக்க முடியாது.  ஆனால் வசந்தின் திரைக்கதை அவரை நாயகனாக்கி கேளடி கண்மணியை 280 நாட்களுக்கு மேல் ஓட வைத்தது.

1991 ஆம் ஆண்டு நீ பாதி நான் பாதி படம் வசந்தின் இயக்கத்தில் வெளியானது.  ட்ரிபிள் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது பெற்ற கொடுரி மரகதமணி கீரவாணி, தமிழ் சினிமாவிற்கு இந்த படம் மூலமாகத்தான் அறிமுகமானார்.

முதல் இரண்டு படங்களுக்கு பின் 4 ஆண்டுகள் இடைவெளி எடுத்துக் கொண்டார் வசந்த்... 1995 ஆம் ஆண்டு அவர் இயக்கிய ஆசை திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானார் சுவலட்சுமி..  இசையமைப்பாளர் தேவாவிற்கும் திருப்புமுனையாக அமைந்த அந்த படம், நாயகன் அஜித்தையும் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது...

வசந்தின் 4 வது படமான நேருக்கு நேர். இதில் இன்றைய முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் சூர்யா நடித்துள்ளனர்.  சூர்யா எனும் மாபெரும் கலைஞனின் மழலை நடைக்கு சிவப்புக் கம்பளம் விரித்தது.  கணவன் மனைவி பிரிவிற்குப் பிறகு அவர்களது சகோதரர்களின் இடையே நடக்கும் மோதலை வைத்து படத்தை இயக்கிய ரசிகர்களுக்கு விருந்து படைத்திருப்பார் இயக்குநர் வசந்த்..

சீரியஸான படங்களை இயக்கிக்கொண்டிருந்த வசந்த்,  பூவெல்லாம் கேட்டுப்பார் எனும் நகைச்சுவை கலந்த படத்தை இயக்கி வெற்றி கண்டார்.  அந்த படம் தான் சூர்யா- ஜோதிகா ஜோடி சேர்ந்த முதல் படம்.

இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வசந்த்,  தான் இயக்கிய படங்களில் தனக்கு நெருக்கமானதாக குறிப்பிடும் படம் ரிதம்.  இந்த படத்தில் முதன் முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் உடன் கூட்டணி அமைத்தார் வசந்த்.  தமிழ்நாடு முழுவதும் பெரும் ஹிட்டடித்த ஆல்பம் அது.  இந்த படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலும் நிலம்,  நீர், நெருப்பு,  ஆகாயம்,  காற்று என ஐம்பெரும்பூதங்களை குறிப்பிடும் வகையில் தனது தனித்துவத்தை வசந்த் பதிவு செய்திருப்பார்.

2003 ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே படத்தில் இடம்பெற்ற 5 பாடல்களை 5 இசையமைப்பாளர்களைக் கொண்டு இசையமைத்து ஹிட்டடித்தார்.

இயக்குநராக 1990ல் தொடங்கிய பயணத்தில் இதுவரை 11 படங்களை மட்டுமே இயக்கி உள்ள வசந்தின் ஒவ்வொரு படமும்,  ரசிகர்களின் மொழியில், தரமான சம்பவங்கள் தான்..  ஜிகர்தண்டா படத்தில் பாபி சிம்ஹா பேசும் சிறப்பான தரமான சம்பவம் எனும் டையலாக் வைக்க வெண்டும்.. அதனால் தான் அவர் தமிழ் சினிமாவின் தனித்துவ இயக்குநராக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.

Advertisement