For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மக்களின் கவனத்தை ஈர்த்த முத்துக்குமரன்! - சூடுபிடிக்கும் #BiggBoss!

07:48 AM Oct 18, 2024 IST | Web Editor
மக்களின் கவனத்தை ஈர்த்த முத்துக்குமரன்    சூடுபிடிக்கும்  biggboss
Advertisement

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் 12ஆம் நாளான நேற்று போட்டியாளர்கள் தங்கள் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் வகையிலான போட்டியில் பங்கேற்றனர்.

Advertisement

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த 6ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், கடந்த வாரம் ரவீந்தர் சந்திரசேகர் வெளியேறினார். தற்போது 17 போட்டியாளர்கள் முட்டி மோதி கொண்டு விளையாடி வருகின்றனர். இந்நிலையில் 12ஆம் நாளான நேற்று போட்டி ஜாலியாக சென்றது. நேற்று போட்டியாளர்கள் பாடல் பாடியதும், நடித்தும் தங்கள் திறைமைகளை வெளிப்படுத்தினர்.

இதில் தொகுப்பாளர் முத்துக்குமரனின் நடிப்பு வெகுவாக பலரையும் ஈர்த்தது. தொகுப்பாளர் முத்துக்குமரனும், ஆர்.ஜே. ஆனந்தியும் சேர்ந்து சிறிய நாடகத்தை அரங்கேற்றினர். திருமணத்துக்குப் பிறகான தம்பதியின் சோக நிகழ்வை சின்னத்திரை நடிகை பவித்ராவும், தீபக்கும் இணைந்து நடித்துக் காண்பித்தனர். விஜே விஷாலும், அன்ஷிதாவும் சீரியசாக நடித்தது பலரிடையே சிரிப்பலையையும் ஏற்படுத்தினாலும், அன்ஷிதா உண்மையாக அழுதுகொண்டு நடிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார்.

தனது நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவம் நினைவுக்கு வந்ததால், நடிப்பதை நிறுதிவிட்டு அழத்தொடங்கினார். பிக் பாஸ் வீட்டில் இருந்த போட்டியாளர்கள் அவரை சமாதானம் செய்தனர். பிக் பாஸ் வீட்டில் சண்டையும், சச்சரவாகவுமே சென்றுகொண்டிருந்த வேளையில், இன்று முழுக்க பொழுதுபோக்காகச் சென்றதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Tags :
Advertisement