பெங்களூரு & பஞ்சாப் மோதல் : பந்துவீச்சை தேர்வு செய்தார் ரஜத் பட்டிதர்!
ஐபிஎல் 2025 தொடரின் 37-ஆவது போட்டியில் முல்லன்பூர் திடலில் நடைபெறும் போட்டியில் பெங்களூரு, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். பெங்களூரு அணியில் லிவிங்ஸ்டன் நீக்கப்பட்டு, ரோமாரியோ ஷெப்பர்டு சேர்க்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் அணியில் எந்த மாற்றமும் இல்லை என அதன் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார். 10 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ள பஞ்சாப் இதில் வெற்றி பெற்றால் 12 புள்ளிகளுடன் முதலிடத்துக்குச் செல்லும்.
8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ள பெங்களூரு அணி இந்தப் போட்டியில் வெற்றிப் பெற்றால் முதலிடத்துக்குச் செல்லவும் வாய்ப்பு உள்ளது.
பஞ்சாப் அணி :
பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா, ஷ்ரேயாஸ் ஐயர், ஜோஷ் இங்கிலிஷ், நேஹல் வதேரா, ஷஷாங் சிங், மார்கஸ் ஸ்டாய்னிஸ், மார்கோ ஜான்சன், சேவியர் பார்ட்லெட், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.
பெங்களூரு அணி :
பிலிப் சால்ட், விராட் கோலி, ரஜத் பட்டிதார், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், க்ருணால் பாண்டியா, ரொமாரியோ ஷெப்பர்ட், புவனேஷ்வர் குமார், சுயாஷ் சர்மா, ஜாஸ் ஹேசில்வுட், யஷ் தயாள்.