Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் மகன் #BCCI செயலாளர் ஆகிறாரா?

06:22 PM Aug 26, 2024 IST | Web Editor
Advertisement

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளராக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் மகன் ரோஹன் ஜெட்லி நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் (பிசிசிஐ) தற்போதைய செயலராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகனான ஜெய் ஷா உள்ளார்.  ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) தலைவரான நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த கிரெக் பார்க்லேவின் பதவிக்காலம் நவம்பர் மாத இறுதியில் முடிவடைய உள்ள நிலையில், பிசிசிஐ செயலாளராக் உள்ள ஜெய் ஷா அடுத்த ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

அதன்படி, ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக நியமிக்கப்பட்டால், அவருக்கு பதிலாக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் மகனும் டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவருமான ரோஹன் ஜெட்லி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் அடுத்த செயலாளராக தேர்வு செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் குழுவில் உள்ள 16 உறுப்பினர்களில் 15 பேரின் ஆதரவு ஜெய் ஷாவுக்கு இருப்பதாகவும், இதனால் அவர் ஐஐசி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags :
BCCIBCCI SecretaryJay ShahRohan Jaitley
Advertisement
Next Article