Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பெங்களூரு குண்டுவெடிப்பு - மூளையாக செயல்பட்ட 2 பேர் கைது!

12:46 PM Apr 12, 2024 IST | Web Editor
Advertisement

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பிற்கு மூளையாக செயல்பட்ட இரண்டு பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். 

Advertisement

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் கடந்த மார்ச் 1 ஆம் தேதி 2 ஐஇடி குண்டுகள் வெடித்தன.  2 குண்டுவெடிப்புகளும் ஒன்றன் பின் ஒன்றாக நடந்தன. இந்த விபத்தில் 10 பேர் படுகாயமடைந்தனர்.  இந்த சம்பவம் குறித்து பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி  வந்தனர்.  இதனையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் இந்த குண்டு வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் (NIA) ஒப்படைத்தது.

இதனையடுத்து தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.  கடந்த மார்ச் 27ஆம் தேதி இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக ஷபீர் என்பவரை கைது செய்தனர்.  அவரை விசாரித்ததில், இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் சிவமோகா மாவட்டம் தீர்த்தஹள்ளியை சேர்ந்த முசபீர் உசேன் சாஜீப் மற்றும் அப்துல் மதீன் அகமது தாகா ஆகியோர் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.  இந்த இருவருக்கும்  ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதையும் என்ஐஏ அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.  இதனையடுத்து இந்த இருவர் குறித்த தகவலை யாரேனும் கொடுத்தால் அவர்களுக்கு ரூ. 10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து,  தீர்த்தஹள்ளியில் உள்ள முசபீர் உசேன் சாஜீப் மற்றும் அப்துல் மதீன் அகமது தாகா ஆகிய 2 பேரின் வீடுகளிலும்,  அங்குள்ள ஒரு செல்போன் கடையிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  இருவரும் மேற்கு வங்கத்தில் தலைமறைவாகி இருப்பதை அறிந்த அதிகாரிகள் இருவரையும் கைதுசெய்வதற்காக மேற்கு வங்கம் விரைந்தனர்.

இந்த நிலையில்,  கொல்கத்தா அருகே பதுங்கியிருந்த முசபீர் உசேன் சாஜீப் மற்றும் அப்துல் மதீன் அகமது தாகா ஆகிய இருவரையும் இன்று அதிகாலையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடியாக கைதுசெய்துள்ளனர்.  இருவரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
ArrestBengaluruCriminalsNIARameswaram Cafe
Advertisement
Next Article