For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

Bakrid 2025 | தமிழ்நாட்டில் பக்ரீத் பண்டிகை எப்போது? அரசு தலைமை காஜி அறிவிப்பு!

தமிழ்நாட்டில் பக்ரீத் பண்டிகை எப்போது? என அரசு தலைமை காஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
09:45 PM May 28, 2025 IST | Web Editor
தமிழ்நாட்டில் பக்ரீத் பண்டிகை எப்போது? என அரசு தலைமை காஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
bakrid 2025   தமிழ்நாட்டில் பக்ரீத் பண்டிகை எப்போது   அரசு தலைமை காஜி அறிவிப்பு
Advertisement

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களால் பக்ரீத் பண்டிகை ஆண்டுதோறும்
கொண்டாடப்பட்டு வருகிறது. ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத் இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. பக்ரீத் பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இந்த நாளில் அசைவ உணவுகளை சமைத்து பலருக்கும் பகிர்ந்து அளித்து, உண்டு மகிழ்வது வழக்கம். இஸ்லாமிய இறைதூதர்களில் முக்கியமானவர்களில் ஒருவராக கருதப்படும் இப்ராஹிம், இறைவனின் கட்டளையை ஏற்று தனது ஒரே மகனான இஸ்மாயிலை பலியிட துணிந்த அவரது தியாகத்தை உலகிற்கு உணர்த்தும் விதமாக இந்த பக்ரீத் திருநாள் கொண்டாடப்படுகிறது.

Advertisement

பிறை தெரிவதன் அடிப்படையிலேயே பக்ரீத் பண்டிகையும் நிச்சயிக்கப்படுகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் வானில் இன்று பிறை தென்பட்டுள்ளது. இதனால், 2025 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் பக்ரீத் பண்டிகை ஜூன் 7 ஆம் தேதி கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, தலைமை காஜி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "ஹிஜ்ரி 1446 துல் கஃதா மாதம் 29 ஆம் தேதி புதன்கிழமை ஆங்கில மாதம் 28-05-2025 தேதி அன்று மாலை துல் ஹஜ் மாத பிறை சென்னையில் காணப்பட்டது. ஆகையால் வியாழக்கிழமை ஆங்கில மாதம் 29-05-2025 தேதி அன்று துல் ஹஜ் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் ஈதுல் அத்ஹா (பக்ரீத்) சனிக்கிழமை 07-06-2025 கொண்டாடப்படும்" என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement