Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: அமைதி பேச்சுவார்த்தை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

03:34 PM Jan 09, 2024 IST | Web Editor
Advertisement

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியை அனைத்து சமுதாயத்தினரும் ஒன்றிணைந்து நடத்தக் கோரிய வழக்கில் அமைதி பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டு, ஜனவரி 11-ம் தேதிக்கு தள்ளி வைத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Advertisement

மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த முனியசாமி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:

“மதுரை அவனியாபுரத்தில் பல சமூகத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டும் ஜல்லிக்கட்டு நடத்துவதில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தாக்கல் செய்த வழக்கில் அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைத்து கமிட்டி அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. அவ்வாறு அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஆகிய ஊர்களில் அரசு நடத்தும் ஜல்லிக்கட்டு விழாவில் அனைத்து சமூகத்தை சேர்த்து கமிட்டி அமைத்து ஜல்லிக்கட்டு விழா நடத்தப்படுகிறது.

ஆனால் அவனியாபுரத்தில் மாவட்ட நிர்வாகம் மட்டுமே ஜல்லிக்கட்டு விழா நடத்துகிறது. எனவே ஜனவரி 15-ம் தேதி நடக்கவிருக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அனைத்து சமூகத்தினரின் இணைத்து கமிட்டி அமைத்து ஜல்லிக்கட்டு விழா நடத்த வேண்டும்” என மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீர கதிரவன் ஆஜராகி,

“அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளும் செய்துவிட்டது. தற்போது அவனியாபுரம் மாநகராட்சி எல்லைக்குள் வருவதால் கிராமத்து கமிட்டியினர் என யாரும் இல்லை.  குறிப்பிட்ட சில சமூகத்தை சேர்ந்தவர்கள் சாதி மற்றும் இயக்கங்களின் பெயரை கூறி ஜல்லிக்கட்டு நடத்த இருக்கும் கடைசி நேரத்தில் வழக்கு தாக்கல் செய்து குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்.

இது தொடர்பாக நாளை மாலை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுதாரர்கள் அனைவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. பேச்சுவார்த்தை இறுதியில் சமூகமான முடிவு ஏற்பட்டால் மனுதாரர் கோரிக்கை பரிசீளிக்கப்படும்” என தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து நீதிபதிகள், “நாளை நடக்க இருக்கும் அமைதி பேச்சு வார்த்தைக்கு அனைத்து தரப்பு மனுதாரர்களை முறையாக நோட்டீஸ் அனுப்பி அழைக்க வேண்டும். அவர்களின் கருத்துக்களை கேட்ட பின்பு சுமூக முடிவை ஏற்படுத்த வேண்டும். மேலும் அமைதி கூட்டத்தை முழுமையாக வீடியோ பதிவு செய்து, எடுக்கப்பட்ட முடிவு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜனவரி 11-ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags :
AvaniyapuramJallikattuMaduraiMHCNews7Tamilnews7TamilUpdatesPongal
Advertisement
Next Article