Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Tiruchendur ஆவணித் திருவிழா! கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது!

07:38 AM Aug 24, 2024 IST | Web Editor
Advertisement

உலகப்புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

Advertisement

ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், ஆவணித் திருவிழா இன்று காலை
கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து வரும் 4-ஆம் தேதி வரை 12 நாட்கள் வெகுவிமரிசையாக திருவிழா நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் சுவாமியும், அம்பாளும் காலை, மாலை என இருவேளைகளிலும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுப்பர்.

ஆவணித் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று கொடிப்பட்டம் வீதி உலா நடைபெற்றது. இதனையொட்டி, திருச்செந்தூர் வடக்கு ரதவீதியில் உள்ள 12-ம் திருவிழா மண்டபத்தில் வைத்து கொடிபட்டத்திற்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கோயில் யானை தெய்வானை மேல் கொடிப்பட்டமானது ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது.

இதையும் படியுங்கள் :சென்னையில் எந்தெந்த பகுதிகளில் இன்று #Powercut தெரியுமா?

இதையடுத்து, ஆவணித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக 30ம் தேதி சிவப்பு சாத்தியும், 31ம் தேதி பச்சை சாத்தியும் நடைபெறுகிறது. ஆவணித் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் செப்டம்பர் 2-ம் தேதி நடைபெறுகிறது.

Tags :
ஆவணித் திருவிழாBakthidevoteessami dharshantiruchendur
Advertisement
Next Article