Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ரயில் பயணிகள் கவனத்திற்கு! நெல்லை-செங்கல்பட்டு மற்றும் நாகர்கோவில்-தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

09:57 PM Aug 10, 2024 IST | Web Editor
Advertisement

ரயிலில் பயணிப்போரின் சிரமத்தை கவனத்தில் கொண்டு 2 வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே.

Advertisement

பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க நெல்லை-செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. நெல்லையில் இருந்து ஆக.13, 18 ஆகிய தேதிகளில் இரவு 10.50 மணிக்கும், மறுமார்க்கத்தில் செங்கல்பட்டில் இருந்து ஆக.14, 19ஆகிய தேதிகளில் மாலை 5.55 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு நாளை(ஆக.11) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

இதேபோல் நாகர்கோவில்-தாம்பரம் இடையேயும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாகர்கோவிலில் இருந்து ஆக.18,25 ஆகிய தேதிகளில் இரவு 11.15 மணிக்கும், மறுமார்க்கத்தில் தாம்பத்தில் இருந்து ஆக.19, 26 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.30 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதற்கான டிக்கெட் முன்பதிவும் நாளை(ஆக.11) காலை 8 மணிக்கு தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
chengalpattuNagercoilNellainews7 tamilNews7 Tamil UpdatesSouthern Railwaysspecial train
Advertisement
Next Article