For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பயணிகளே கவனியுங்கள்! - நெல்லையிலிருந்து பெங்களூருக்கு தென்காசி வழியாக சிறப்பு ரயில்!

பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்க திருநெல்வேலி மற்றும் பெங்களூரு இடையே சிறப்பு ரயில்கள் இயங்க உள்ளது.
08:02 AM Aug 12, 2025 IST | Web Editor
பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்க திருநெல்வேலி மற்றும் பெங்களூரு இடையே சிறப்பு ரயில்கள் இயங்க உள்ளது.
பயணிகளே கவனியுங்கள்    நெல்லையிலிருந்து பெங்களூருக்கு தென்காசி வழியாக சிறப்பு ரயில்
Advertisement

Advertisement

பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே திருநெல்வேலி-பெங்களூரு (சிவசோகா) இடையே சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளது. இந்த ரயில்கள் தென்காசி வழியாகச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

திருநெல்வேலியில் இருந்து புறப்படும் ரயில், ஆகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4:20 மணிக்குக் கிளம்பி, மறுநாள் திங்கட்கிழமை மதியம் 12:30 மணிக்கு பெங்களூருவை வந்தடையும். இந்த ரயில் பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், விருதுநகர் மற்றும் மதுரை வழியாகச் செல்லும்.

அதேபோல், பெங்களூருவில் இருந்து புறப்படும் ரயில், ஆகஸ்ட் 18, திங்கட்கிழமை அன்று மதியம் 2:15 மணிக்குக் கிளம்பி, செவ்வாய்க்கிழமை காலை 10:15 மணிக்கு திருநெல்வேலியை வந்தடையும். இந்த ரயில் மதுரை, விருதுநகர், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி மற்றும் பாவூர்சத்திரம் வழியாகப் பயணிக்கும்.

இந்தப் புதிய சிறப்பு ரயில்கள் தென்மாவட்டங்களில் இருந்து பெங்களூருக்குச் செல்லும் பயணிகளுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
Advertisement