பயணிகள் கவனத்திற்கு... மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சென்னை விமான நிலையத்துக்கான மெட்ரோ ரயில் சேவை நேற்று (ஜுன் 11)தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இருப்பினும், விம்கோ நகர் டிப்போவிற்கும் மீனம்பாக்கத்திற்கும் இடையிலான சேவைகள் வழக்கம் போல் இயங்கியது. இதற்கிடையே, மெட்ரோ ரயில் நிர்வாகம் நேற்று (ஜுன் 11) வெளியிட்ட அறிவிப்பில், "தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு விம்கோ நகர் டிப்போ மற்றும் விமான நிலையம் இடையேயான நீல வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவைகள் மீண்டும் வழக்கம் போல் தொடங்கியுள்ளன. பச்சை வழித்தடத்தில் சென்ட்ரல் முதல் செயிண்ட் தாமஸ் மவுண்ட் வரையிலான ரயில் சேவை வழக்கம் போல் இயங்குகிறது.
இதையும் படியுங்கள் : “மகளிரை அவமதிக்கும் திமுக அரசு இனியாவது திருந்தட்டும்” – திமுக எம்எல்ஏ பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!
பச்சை வழித்தடத்தில் சென்னை சென்ட்ரல் மற்றும் விமான நிலையம் (கோயம்பேடு வழி) இடையேயான நேரடி மெட்ரோ ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் விமான நிலையத்தை அடைய ஆலந்தூர் நிலையத்தில் வழித்தட பரிமாற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்" என்று தெரிவித்திருந்தது.
Metro train services between Central Metro and Airport via Koyambedu on the Green Line have resumed normal operations.
Train services between Wimco Nagar Depot and Airport on the Blue Line and Central to St.Thomas Mount in Green Line are also running as per the normal schedule.— Chennai Metro Rail (@cmrlofficial) June 12, 2025
இந்த நிலையில், சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையேயான நேரடி மெட்ரோ ரயில் சேவை ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
"சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக பச்சை நிற வழித்தடத்தில் விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில் சேவைகள் மீண்டும் வழக்கம் போல் தொடங்கியுள்ளன. விம்கோ நகர் டிப்போ - விமான நிலையம் இடையிலான நீல நிற வழித்தடத்திலும், சென்ட்ரல் முதல் தாமஸ் மவுண்ட் வரையிலான பச்சை நிற வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படுகின்றன"
இவ்வாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.