For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னை வாசிகள் கவனத்திற்கு... கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாளை #Metro ரயில் சேவையில் மாற்றம்!

06:31 PM Aug 25, 2024 IST | Web Editor
சென்னை வாசிகள் கவனத்திற்கு    கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாளை  metro ரயில் சேவையில் மாற்றம்
Advertisement

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

கிருஷ்ண ஜெயந்தி நாடு முழுவதும் நாளை (ஆகஸ்ட் 26) கொண்டாடப்பட உள்ளது. இந்த சூழலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாளை சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திங்கட் கிழமையான நாளை சனிக்கிழமை அட்டவணையின் படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,  "காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். காலை 8 மணி முதல் பகல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் மெட்ரோ ரயில்கள் 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

அதேபோல், காலை 5 முதல் காலை 8 மணி வரையும், பகல் 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். இரவு 10 மணி முதல் இரவு 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்." இவ்வாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement