Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மிளகாய் பொடி தூவி மணப்பெண்ணை கடத்த முயற்சி - வைரலாகும் வீடியோ!

03:05 PM Apr 23, 2024 IST | Web Editor
Advertisement

ஆந்திர மாநிலத்தில் காதல் திருமணம் செய்த பெண்ணை,  மிளகாய் பொடி தூவி பெண்ணின் உறவினர்கள் கடத்த முயன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Advertisement

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர் சினேகா.  இவர் பால்நாடு மாவட்டத்தில் உள்ள நரசராவ்பேட்டையில் படிக்கும் போது வெங்கடானந்து என்பவரை காதலித்து வந்துள்ளார்.  இந்நிலையில் இருவரும் கடந்த ஏப். 13 ஆம் தேதி ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.  இதனையடுத்து இவர்களின் இந்த திருமணத்திற்கு மணமகன் வீட்டில் சம்மதம் தெரிவித்து,  கிழக்கு கோதாவரி மாவட்டம்,  ராஜமுந்திரி அருகே உள்ள கடையம் கிராமத்தில் வரவேற்பு விழா ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

விழா நடந்து கொண்டிருந்த போது திடீரென உள்ளே வந்த சினேகாவின் அம்மா மற்றும் சகோதரர்,  அறையில் இருந்த சினேகாவை கையை பிடித்து தரதரவென இழுத்து வந்துள்ளனர்.  இதனை பார்த்த மணமகன் வீட்டார் மற்றும் அவரது நண்பர்கள் அவர்களை தடுக்க முயன்றுள்ளனர்.  அப்போது,  மணமகன் வீட்டார் மீது மிளகாய்த்தூளை தூவி அவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.  இதில் வெங்கடானந்தின் நண்பர் பலத்த காயமடைந்தார்.

இரு தரப்பினருக்கும் மோதல் அதிகரித்ததை அடுத்து,  போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரிடம் தன் வீட்டார் தன்னை கடத்த முயற்சித்ததாக சினேகா புகார் அளித்தார்.  புகாரின் பேரில் தாக்குதல்,  கடத்தல் முயற்சி,  மணப்பெண்ணின் நகை திருட்டு போன்ற குற்றங்களின்கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  மிளகாய்ப்பொடி தூவி பெண்ணை கடத்த முயன்ற இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags :
BrideChilly PowderCrimePoliceTrafficking women
Advertisement
Next Article