For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அடுத்தடுத்து 4 படங்களை தயாரிக்கும் அட்லீ..!

08:18 PM Nov 21, 2023 IST | Web Editor
அடுத்தடுத்து 4 படங்களை தயாரிக்கும் அட்லீ
Advertisement

இயக்குநர் அட்லீ தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நிலையில் அடுத்தடுத்த 4 படங்களை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement

தமிழ் திரையுலகில், தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்துவரும் இளம் இயக்குநர்களில் ஒருவர் அட்லீ.  இவர் இயக்குனர் ஷங்கரிடம் , நண்பன் மற்றும் எந்திரன் ஆகிய இரு படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்து விட்டு, ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

அதன்பின், நடிகர் விஜய்யுடன் இணைந்து மூன்று தொடர் வெற்றிப்படங்களை கொடுத்தார்.  பிகில் திரைப்படமானது, 300 கோடியைத் தாண்டியதாக தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் அறிவித்தது. விஜய் நடித்து வசூலில் 300 கோடியைத் தாண்டிய முதல் படமாகவும் இந்தப் படம் அமைந்தது.

பிகில் படம் தயாரித்துக் கொண்டிருந்தபோதே, அட்லீ தனது அடுத்த படத்தில் ஷாருக்கானை வைத்து இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. அட்லீயை பொறுத்தவரை, அவர் இயக்கும் ஐந்தாவது படம்தான் ஜவான். இருந்தபோதும் ஜவான் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் துணிந்து 300 கோடி ரூபாயை முதலீடு செய்தது.

தற்போது ஜாவான் ரூ.1140 கோடி வசூல் செய்துள்ளது. இந்த வெற்றியை தொடர்ந்து, 3000 கோடி வசூல் செய்யும் படத்தினை இயக்க உள்ளதாக அட்லீ அறிவித்துள்ளார். இத்திரைப்படத்தை நடிகர் விஜய் மற்றும் ஷாருக்கானை வைத்து இயக்கப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், அட்லி தன் தயாரிப்பு நிறுவனமான 'ஏ ஃபார் ஆப்பிள்' மூலம் ஹிந்தியில் தெறி படத்தின் ரீமேக்கை தயாரித்து வருகிறார். வருண் தவான் நாயகனாகவும், கீர்த்தி சுரேஷ், வாமிகா கேபி நாயகிகளாக நடிக்க உள்ளனர்.  இப்படத்தை காளிஸ் இயக்குகிறார்.

மேலும், தமிழில் 2 படங்களையும் தெலுங்கில் ஒரு படத்தையும் அட்லீ தயாரிக்க உள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், இதன் இயக்குநர்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. தன் தயாரிப்பில் முதல் படம் வெளியாகாத நிலையில், அட்லீ ஒரே நேரத்தில் 4 படங்களை தயாரிக்க முன்வந்திருப்பது  ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement