For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஆருத்ரா மோசடி வழக்கு: நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் விசாரணை நிறைவு - நாளை மீண்டும் ஆஜர்!

06:53 PM Dec 12, 2023 IST | Web Editor
ஆருத்ரா மோசடி வழக்கு  நடிகர் ஆர் கே சுரேஷிடம் விசாரணை  நிறைவு   நாளை மீண்டும் ஆஜர்
Advertisement

ஆருத்ரா மோசடி தொடர்பாக இன்று ஆஜரான நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் நடைபெற்ற 7 மணிநேர விசாரணை முடிவுக்கு வந்தது. நாளை அவர் மீண்டும் ஆஜராகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Advertisement

இன்று காலை 11 மணியளவில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் அசோக் நகரில் உள்ள மாநில பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் ஏடிஎஸ்பி வேல்முருகன் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் கைதான ரூசோ, நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் ரூ. 15 கோடி கொடுத்தது விசாரணையில் தெரிய வந்தது.

அதனடிப்படையில் இன்று ஆர்.கே.சுரேஷிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், ரூசோவுடனான தொடர்பு எப்படி ஏற்பட்டது? அவர் கொடுத்தது ஆருத்ரா மோசடி பணமா? இந்த வழக்கில் பாஜக நிர்வாகி ஹரீஷ்ஷூடனான தொடர்பு குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் வழக்கு தொடர்பாக நடிகர் ஆர்.கே.சுரேஷிசம் நடைபெற்ற விசாரணை முடிவுக்கு வந்தது. பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவரிடம் சுமார் 7 மணிநேரம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து இந்த மோசடிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், நாளை மீண்டும் அவர் ஆஜராகவுள்ளதாகவும் செய்தியாளர்களுக்கு நடிகர் ஆர்.கே.சுரேஷ் பேட்டியளித்தார்.

முன்னதாக,  விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஆர்.கே சுரேஷிடம் பத்திரிக்கையாளர்கள், இவ்வளவு நாள் தலைமறைவாக இருந்தது ஏன் என கேட்கப்பட்டதற்கு, “நான் தலைமறைவாகவில்லை. விசாரணைக்கு ஆஜராகி விட்டு செய்தியாளர்களைச் சந்திக்கிறேன் என அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

Tags :
Advertisement