கலை இயக்குநர் சுரேஷ் கல்லேரி மாரடைப்பால் காலமானார்!
கலை இயக்குநர் சுரேஷ் கல்லேரி மாரடைப்பால் காலமாகியுள்ளார்.
06:10 PM Feb 13, 2025 IST | Web Editor
Advertisement
தமிழ் சினிமாவில் கடந்த கடந்த 2008ம் வெளியான தெனாவெட்டு படத்தின் மூலம் கலை இயக்குநராக அறிமுகமானவர் சுரேஷ் கல்லேரி. அதன் பின்பு இவர் குட்டிப்புலி, அநீதி, ஜெயில் உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் மணிகண்டனின் குடும்பஸ்தன் படத்திற்கும் கலை இயக்குநராக இவர் பணியாற்றியுள்ளார்.
Advertisement
இந்த நிலையில் சுரேஷ் கல்லேரி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். நள்ளிரவு 12.30 மணியளவில் இவர் மாரடைப்பால் காலமாகியுள்ளார். இவரது மறைவு திரையுலகத்தில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சுரேஷ் கல்லேரியுடன் பணியாற்றிய வசந்த பாலன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரின் இறுதி சடங்கு இன்று(பிப்.13) மாலை ஏவிஎம் இடுகாட்டில் நடைபெற்றது.