For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - கைது செய்யப்பட்ட #Advocates தொழில் செய்ய தடை!

07:29 PM Aug 30, 2024 IST | Web Editor
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு   கைது செய்யப்பட்ட  advocates தொழில் செய்ய தடை
Advertisement

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பான வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி, பாஜக பிரமுகர் அஞ்சலை, அஸ்வத்தாமன், ரவுடி நாகேந்திரன், ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி உட்பட மொத்தம் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், கூலிப்படையை சேர்ந்த திருவேங்கடம் காவல்துறையால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சம்போ செந்தில் மற்றும் அவரது கூட்டாளியான வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணாவை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதனிடையே மொட்டை கிருஷ்ணாவுடன் தொடர்பு கொண்டதாக பிரபல இயக்குநர் நெல்சனின் மனைவியிடம் விசாரணை நடைபெற்றது. மேலும் தேடப்பட்டு வந்த ரவுடி திருவேங்கடம் துபாயில் இருந்து ஆக. 23-ம் தேதி சென்னை வந்தபோது விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து, குற்றவாளி சம்போ செந்திலின் முன்னாள் மனைவியிடம் விசாரணை நடத்திய போது, 2020-ம் ஆண்டு வரை சம்போ செந்தில் இவருடன் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவரிடம் இருந்து சம்போ செந்திலின் தற்போதைய உருவம் குறித்த புகைப்படத்தை போலீசார் கைப்பற்றினர்.

இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர்கள் ஹரிஹரன், அஸ்வத்தாமன், சிவா, ஹரிதரன் ஆகியோருக்கு வழக்கு முடியும் வரை தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

Advertisement