Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! - ரவுடி சீசிங் ராஜாவை பிடிக்க ஆந்திரா விரைந்த தனிப்படை போலீசார்!

04:54 PM Jul 21, 2024 IST | Web Editor
Advertisement

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி சீசிங் ராஜாவை பிடிக்க தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

சென்னை பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி பெரம்பூரில் அவர் புதிதாக கட்டிவரும் வீடு அருகே அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் போல் வந்த கும்பல், கட்டுமான பணியை பார்வையிட்டுக் கொண்டிருந்த ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி சாய்த்துவிட்டு தப்பி ஓடினர். தமிழ்நாடு முழுவதும் இந்த படுகொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொலை வழக்கில் இதுவரை சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞரும் அதிமுகவில் இருந்து தற்போது நீக்கப்பட்டவருமான பெண் தாதா மலர்க்கொடி மற்றும் மற்றொரு வழக்கறிஞர் ஹரிதரன், திருநின்றவூரைச் சேர்ந்த அருளின் கூட்டாளியும் திமுக பிரமுகரின் மகனுமான சதீஷ், பாஜக முன்னாள் நிர்வாகியான அஞ்சலை ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

நேற்று (ஜூலை -20) ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், திருவள்ளூரை சேர்ந்த கடம்பத்தூர் அதிமுகவில் இருந்து தற்போது நீக்கப்பட்டவருமான ஹரிதரனை  காவல்துறையினர் கைது செய்தனர். கைதான ஹரிதரனை அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார். இதன்படி ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படியுங்கள் : “10 ஆண்டுகளாக வருமான வரிச் சுமை குறைக்கப்படும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்” – நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

இதையடுத்து, கைதான ஹரிதரனிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.  விசாரணை அடிப்படையில் அவருடன் பணிபுரிந்த வழக்கறிஞர்கள் திருவள்ளூர் நகர தேமுதிக செயலாளர் மணிகண்டன் மற்றும் ஜல்லிமேடு
வேலா என்கிற வேலாயுதம் உள்ளிட்ட 5 பேரிடம் தனிப்படை காவல்துறையினர் தொடர்ந்து
விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விசாரணையின் அடிப்படையில் மேலும் பலர் கைது செய்ய வாய்ப்புள்ளதாகவும் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடிகளான சம்போ செந்தில் மற்றும் சீசிங் ராஜா ஆகியோருக்கு தொடர்பிருப்பதாக கூறப்படும் நிலையில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் கட்டப்பஞ்சாயத்து, மாமுல் வசூல், தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறித்தல் போன்ற வேலைகளில் சீசிங் ராஜா ஈடுபட்டு வருவதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். ஆற்காடு சுரேஷின் நெருங்கிய கூட்டாளியான சீசிங் ராஜா, தனது நண்பர் கொலைக்கு பழிக்கு பழி வாங்கும் வகையில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டம் தீட்டி கொடுத்தவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

Tags :
amstrongdeathandhrapradeshBSPPoliceTNPolice
Advertisement
Next Article