Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆயுதப்படை பட்டாலியன் எஸ்.பி. அருண் திடீர் ராஜிநாமா!

ஆயுதப்படை போலீஸ் பாட்டாலியன் எஸ்.பி. அருண் திடீர் ராஜிநாமா.
03:29 PM Jun 15, 2025 IST | Web Editor
ஆயுதப்படை போலீஸ் பாட்டாலியன் எஸ்.பி. அருண் திடீர் ராஜிநாமா.
Advertisement

ஆயுதப்படை பிரிவில் 12வது பட்டாலியன் கமாண்டன்டாக இருப்பவர் அருண். இவர் திடீரென்று தனது பதவியை ராஜிநாமா செய்ய முடிவு செய்து, ஆயுதப்படை ஏடிஜிபி ஜெயராமுக்கு கடிதம் எழுதினார். இந்தக் கடிதம், டிஜிபி சங்கர் ஜிவால் மூலம் உள்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ராஜிநாமா கடிதத்தை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டது.

Advertisement

அதைத் தொடர்ந்து போலீஸ் துறையில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கான கடிதம் அவரிடம் வழங்கப்பட்டது. அருண் வெளிநாட்டிற்கு செல்வதால் ராஜிநாமா செய்வதாக ஆயுதப்படை ஏடிஜிபி ஜெயராமுக்கு அனுப்பிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். அருண் மதுராந்தகத்தைச் சேர்ந்தவர். 2013ம் ஆண்டு குரூப் 1 தேர்வு மூலம் டிஎஸ்பியாக பணியில் சேர்ந்தார். பின்னர் 2024ல் எஸ்பியாக பதவி உயர்வு பெற்றார்.

Tags :
dgpPolice BatonResignationTN Govt
Advertisement
Next Article