For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சர்வதேச பிரீஸ்டைல் செஸ் தொடரில் அரையிறுதிக்கு முன்​னேறி​னார் அர்​​ஜுன் எரி​கைசி!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் சர்வதேச பிரீஸ்டைல் செஸ் தொடரில் இந்திய வீரரான் அர்ஜின் எரிகைசி அரை இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார்.
11:44 AM Jul 19, 2025 IST | Web Editor
அமெரிக்காவில் நடைபெற்று வரும் சர்வதேச பிரீஸ்டைல் செஸ் தொடரில் இந்திய வீரரான் அர்ஜின் எரிகைசி அரை இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார்.
சர்வதேச பிரீஸ்டைல் செஸ் தொடரில் அரையிறுதிக்கு முன்​னேறி​னார் அர்​​ஜுன் எரி​கைசி
Advertisement

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில்  சர்வதேச பிரீஸ்டைல் செஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 வீரர்கள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதினர். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 4 இடங்களைப் பிடித்தவர்கள் காலலிறுதிக்கு முன்னேறினர். இதன் கால் இறுதி சுற்று ஒன்றில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான அர்​​ஜுன் எரி​கைசி, உஸ்​பெகிஸ்​தான் வீரரான நோடிர்​பெக் அப்​துசத்​தோரோவுடன் மோதி​னார்.

Advertisement

முதல் ரேபிட் ஆட்டத்தில் வெற்றியும், 2-வது ஆட்டத்தில் டிராவும் செய்த அர்​ஜுன் எரி​கைசி போட்டியின் முடி​வில் 1.5-0.5 என்ற கணக்​கில் நோடிர்​பெக் அப்துசத்​தோரோவை வீழ்த்தி  அரை இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார். இதன் மூலம் ஃப்ரீஸ்​டைல் கிராண்ட் ஸ்லாம் டூர் செஸ் தொடரில் அரை இறு​திக்கு முன்​னேறிய முதல் இந்​திய வீரர் என்ற வரலாற்று சாதனையை​யும் அர்​​ஜுன் எரி​கைசி படைத்​துள்​ளார்.காலிறுதியின் மற்றொரு ஆட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த மற்றொரு வீரரான பிரக்ஞானந்தா அமெரிக்காவின் ஃபாபியானோ கரானாவிடம்  3-4 என்ற கணக்கில் தோல்வி கண்டாா்.

Tags :
Advertisement