Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விபரீதத்தில் முடிந்த வாக்குவாதம்… #Thanjavur-ல் பரபரப்பு!

04:20 PM Sep 07, 2024 IST | Web Editor
Advertisement

தங்சாவூரில் சட்டக் கல்லூரி மாணவருக்கு பட்டப்பகலில் அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தஞ்சாவூர் மாவட்டம் ஆற்றுப்பாலம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல் பங்கிற்கு பாலசுப்பிரமணியம் என்பவர் இன்று காலை பெட்ரோல் போடுவதற்காக வந்துள்ளார். அப்போது அவர் வரிசையில் நிற்காததால் அங்கு பணிபுரியும் பெண் ஊழியர் அவரை வரிசையில் நிற்குமாறு அறிவுறுத்தி இருக்கிறார்.

தொடர்ந்து பாலசுப்ரமணியனுக்கும் அங்கு பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதை அடுத்து அந்தப் பெண் ஊழியர் தனது கணவருக்கு செல்போனில் தகவல் அளித்திருக்கிறார். அதேபோல், பாலசுப்பிரமணியமும் சட்ட கல்லூரி மாணவரான தனது மகன் ஹரிஹரனை அழைத்தார்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது, ஆத்திரமடைந்த ஹரிஹரன் அந்த பெண் ஊழியரின் கணவரை தாக்கியுள்ளார். இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற அவர், மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை எடுத்து சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் ஹரிஹரன் முதுகில் வெட்டு விழுந்தது. தொடர்ந்து, அருகில் இருந்த சிலர் அவரை தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பான காட்சிகளை காண...

Tags :
Crimehospitalinvestigationpetrol bunkPoliceThanjavurtreatment
Advertisement
Next Article