Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கணவன் - மனைவி இடையே தகராறு... தடுக்க சென்ற உறவினர் கொலை!

08:10 AM Jul 01, 2024 IST | Web Editor
Advertisement

ஈரோடு அருகே கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் அதை தடுக்கச் சென்ற உறவினர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள முத்துமாரியம்மன் கோயில் இரண்டாவது வீதியில்
கலைச்செல்வன் ஜோதிமணி தம்பதியினர் வசித்து வருகின்றனர்.  கலைச்செல்வனுக்கும் அவரது மனைவி ஜோதிமணிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் நேற்று மது போதையில் வீட்டிற்கு வந்த கலைச்செல்வன் மனைவி ஜோதிமணியிடம் தகராறில் ஈடுபட்டார்.

இதனையறிந்த ஜோதிமணியின் தங்கை கல்பனா இருவரையும் சமாதானம் செய்ய முயற்சி செய்தார்.  அப்போது கலைச்செல்வன் வீட்டில் இருந்த கத்திரிக்கோலால் ஜோதிமணி, கல்பனா ஆகிய இருவரையும் தாக்கினார்.  இதில் கல்பனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் ஜோதிமணி படுகாயமடைந்தார்.  இதனையடுத்து அப்பகுதி மக்கள் கலைச்செல்வனை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.  படுகாயமடைந்த ஜோதிமணியை பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
BhavaniCrimeErodePolicetreatment
Advertisement
Next Article