For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

30 நாட்களுக்குள் அடுத்தடுத்து 2 மரணங்கள்...# GuwahatiIIT விடுதியில் நடந்தது என்ன?

12:11 PM Sep 10, 2024 IST | Web Editor
30 நாட்களுக்குள் அடுத்தடுத்து 2 மரணங்கள்     guwahatiiit விடுதியில் நடந்தது என்ன
Advertisement

கவுகாத்தி ஐஐடி கல்வி நிறுவன விடுதியில் மூன்றாமாண்டு கல்லூரி மாணவர், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

அசாம் மாநிலம் கவுகாத்தியில் இந்திய தொழில்நுட்பக் கழகமான ஐஐடி கல்வி நிறுவனம் உள்ளது. இந்த கல்லூரியில் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி விடுதியில் உள்ள அறை ஒன்றில் மூன்றாம் ஆண்டு படிக்கும் 21 வயது மாணவர் நேற்று சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இது இந்த ஆண்டின் நான்காவது சம்பவமாகும். இந்த சம்பவத்தை கண்டித்து மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மாணவரின் உடலை கைப்பற்றி, உடற்கூராய்விற்காக கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தற்கொலை இல்லை என சில மாணவர்கள் கூறி வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் கடந்த மாதம் 9ஆம் தேதியும் இதே விடுதியின் 24 வயதான எம்டெக் மாணவி, அவரது அறையில் இறந்து கிடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement