Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கேரளாவில் மேலும் ஒரு சிறுவனுக்கு அமீபிக் மூளை காய்ச்சல்!

10:07 PM Jul 29, 2024 IST | Web Editor
Advertisement

கேரளாவின் காரபறம்பு பகுதியை சேர்ந்த மேலும் ஒரு சிறுவனுக்கு அமீபிக் மூளை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Advertisement

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மேலும் ஒரு சிறுவனுக்கு அமீபிக் மூளைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.  காரபறம்பு பகுதியை சேர்ந்த நான்கு வயது சிறுவனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே மூன்றரை வயது சிறுவனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.  கடந்த இரு மாதங்களில் இரு சிறுமிகளும், ஒரு சிறுவனும் அமீபிக் மூளைக் காய்ச்சலுக்கு பலியான நிலையில், மேலும் இருவர் அனுமதிக்கப்பட்டுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதன்மை அமீபிக் மெனிங்கோ-என்செபாலிடிஸ் (பிஏஎம்), என்பது யூகாரியோட் நெக்லேரியா ஃபோலேரி மூலம் மூளையில் ஏற்படும் அபாயகரமான தொற்று ஆகும். இதற்கு தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி, குழப்பம், பிரமைகள் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் தென்படும்.

Tags :
Amoeba VirusChildhospitalKeralatreatmentvirus fever
Advertisement
Next Article