Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாமக வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் தலைவராக கே.பாலு தொடர்வார் என அறிவிப்பு!

பாட்டாளி மக்கள் கட்சியின் சமூக நீதிப் பேரவை தலைவர் பொறுப்பில் இருந்து வழக்கறிஞர் பாலு நீக்கம் செய்யப்பட்டதாக நேற்று ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், அவர் அப்பதவியில் தொடர்வார் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
08:11 PM Jun 11, 2025 IST | Web Editor
பாட்டாளி மக்கள் கட்சியின் சமூக நீதிப் பேரவை தலைவர் பொறுப்பில் இருந்து வழக்கறிஞர் பாலு நீக்கம் செய்யப்பட்டதாக நேற்று ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், அவர் அப்பதவியில் தொடர்வார் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
Advertisement

பாமக வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் சிறப்புச் செயற்குழுக் கூட்டம் சென்னையில் இன்று  நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேரவையின் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட அறங்காவலர்கள், மாவட்ட செயலாளர்கள், மாவட்டத் தலைவர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Advertisement

வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் தலைவராக வழக்கறிஞர் கே.பாலு தொடர்வார். வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் புரவலராக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் என இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நேற்று பாமக சமூக நீதிப் பேரவை மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்து வழக்கறிஞர் பாலுவை நீக்கி, அவருக்கு பதில் வழக்கறிஞர் கோபியை மாநிலத் தலைவராக பணியமர்த்தி ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்நிலையில் பாமகவின் வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையின் தலைவராக பதவி காலம் முடியும் வரையில் வழக்கறிஞர் பாலு தொடர்வார் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகவே பாமகவில் உள்கட்சி பூசல் தொடர்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இடையே நிலவும் பனிப்போரால் நிர்வாகிகள் குழம்பி போய் உள்ளனர். ராமதாஸ் நீக்கம் செய்து அறிவிக்கும் நிர்வாகிகள், மீண்டும் பொறுப்பில் இருப்பதாக ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டு வருகிறார்.

Tags :
Anbumani RamadossBaluPMK
Advertisement
Next Article