For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு பிப்.3-ம் தேதி திமுக சார்பில் அமைதி பேரணி!

01:27 PM Jan 28, 2024 IST | Web Editor
அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு பிப் 3 ம் தேதி திமுக சார்பில் அமைதி பேரணி
Advertisement

அண்ணாவின் 55வது நினைவு தினத்தை முன்னிட்டு பிப்.3ம் தேதி திமுக சார்பில் அமைதி பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

“அண்ணாவின் 55வது நினைவு நாளினையொட்டி, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் கட்சியின் முன்னணியினர் வரும் பிப்ரவரி 3-ம் தேதி, சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார்கள். இந்த அமைதிப் பேரணி வாலாஜா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகிலிருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடையும்.

கட்சியின் இந்நாள் - முன்னாள் அமைச்சர்கள், இந்நாள் முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள், தலைமைச் செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் அணி, மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி, மாணவர் அணி, தொண்டர் அணி, தொழிலாளர் அணி விவசாய அணி விவசாயத் தொழிலாளர் அணி, ஆதிதிராவிடர் நல உரிமைப் பிரிவு, மீனவர் அணி, கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை, இலக்கிய அணி, வழக்கறிஞர் அணி, நெசவாளர் அணி, பொறியாளர் அணி, மருத்துவ அணி, சிறுபான்மையினர் நலஉரிமைப் பிரிவு, வர்த்தகர் அணி, தகவல் தொழில் நுட்ப அணி, சுற்றுச்சூழல் அணி, அயலக அணி, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி ஆகிய அனைத்து அணியினரும் அண்ணாவின் நினைவு போற்றி அஞ்சலி செலுத்த திரண்டு வாரீர் என சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை கிழக்கு, சென்னை தெற்கு, சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு ஆகிய மாவட்டக் கழகங்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement