Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அண்ணாவின் 55-வது நினைவு நாள் – அதிமுக சார்பில் மரியாதை!

12:40 PM Feb 03, 2024 IST | Web Editor
Advertisement

சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்திற்கு நேரில் சென்று, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Advertisement

பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு தினத்தை முன்னிட்டு சேப்பாக்கத்தில் உள்ள அரசினர் விடுதி அருகில் இருந்து அண்ணா நினைவிடம் வரை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. அமைதிப் பேரணியில் அமைச்சர்கள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பேரணியாக சென்ற திமுக‌ பொருளாளர் டி.ஆர்.பாலு, திமுக துணை பொதுச் செயலாளர்கள் அ.ராசா எம்.பி, கனிமொழி எம்பி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மா.சுப்பிரமணியன், காந்தி, செஞ்சி மஸ்தான், சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், சி.வெ.கணேசன், ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணாவின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் அவரது நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயினில் பேரறிஞர் அண்ணாவின் உருவப் படத்திற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்திற்கு நேரில் சென்று, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில்.

சமூகவியல் கொள்கையாக இருந்த திராவிடத்தை ஒப்பற்ற அரசியல் தத்துவமாக மாற்றியவரும், ஆட்சிக் கட்டிலில் திராவிடத்தை அமரச் செய்து, மாநிலத்தின் பெயர் முதல் அரசின் பதவிகள், கோப்புகள் வரை "எங்கும் தமிழ், எதிலும் தமிழ்" என நவீன தமிழ்நாட்டை கட்டமைத்து அதனை தமிழ்மயமாக்கிய மாபெரும் தமிழ்க் கனவு கண்ட, கழகத்தின் முதல் எழுத்து, பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 55வது நினைவு நாளில் அவரைப் போற்றி வணங்குவதுடன், தமிழ்நாட்டின் சீர்மிகு கொள்கைகளாகப் பேரறிஞர் அண்ணா நிறுவிய சமூகநீதி-சமத்துவம்-மாநில சுயாட்சி ஆகியவற்றைப் தொடர்ந்து பேணிக் காத்திடுவோம்!” என பதிவிட்டுள்ளார்.

Tags :
என்றென்றும்_அண்ணாADMKAIADMKAnnaedappadi palaniswamiMemorial DayNews7Tamilnews7TamilUpdatesPerarignar Annarally
Advertisement
Next Article