Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"அண்ணாமலைக்கு எதுவும் தெரியாது" - கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பேட்டி!

அண்ணாமலைக்கு எதுவும் தெரியாது, கட்சி அவருக்கு கொடுக்கின்ற வேலையை மட்டுமே செய்கிறார் என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
09:29 AM Mar 23, 2025 IST | Web Editor
Advertisement

சென்னை விமான நிலையத்தில் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,

Advertisement

"எந்த திட்டமும் இல்லாமல் நேற்றைய கூட்டம் நடந்ததாக அண்ணாமலை கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், இங்கு அண்ணாமலை சொன்னது முக்கியமானதில்லை. பிரதமரும், உள்துறை அமைச்சரும் இந்த நாட்டிற்கு என்ன சொன்னார்கள் என்பது தான் முக்கியம்.

அண்ணாமலைக்கு எதுவும் தெரியாது, கட்சி அவருக்கு கொடுத்த வேலையை மட்டுமே செய்கிறார். அவர் மாநிலத்திற்கு உண்மையாக இல்லை, அவர் கட்சிக்கு மட்டுமே உண்மையாக இருக்கின்றார், அவர் வேலையை செய்யட்டும் என்றார்.

தொடர்ந்து பேசுகையில், மாநில சட்டசபை தொகுதிகளை மறுசீரமைப்பு செய்தால் அது குறித்து உங்கள் கருத்து என்ன என்ற கேள்விக்கு, இதுகுறித்து ரேவந்த் ரெட்டி பேசி இருக்கின்றார். முதலில் நமது ஒருங்கிணைந்த குரலை வலுவானதாக்குவோம். அதன் பிறகு நாடாளுமன்றம் குறித்து பேசலாம் என்றார்.

மேலும், இங்கு மாநிலத்தில் காங்கிரஸ் இருக்கின்றார்கள். இது திமுக அரசு ஏற்பாடு செய்த கூட்டம். 40 முதல் 50 அரசியல் கட்சிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைத்திருந்தார். தென்னிந்தியாவை சேர்ந்த அனைத்து கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள். ஒடிசா, பஞ்சாப் போன்ற மாநிலங்களை சேர்ந்ததவர்களும் கூட்டத்தில் கலந்துகொண்டார்கள்" என தெரிவித்துள்ளார்.

Tags :
AirportAnnamalaiChennaiD.K. SivakumarDeputy Chief MinisterinterviewKarnataka
Advertisement
Next Article