For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அண்ணா, கருணாநிதி நினைவிடங்களை திறந்துவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

07:26 PM Feb 26, 2024 IST | Web Editor
அண்ணா  கருணாநிதி நினைவிடங்களை திறந்துவைத்தார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்
Advertisement

முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதியின் புனரமைக்கப்பட்ட நினைவிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Advertisement

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட அண்ணாவின் நினைவிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப். 26) திறந்து வைக்க உள்ளார் என அறிவிக்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 2018-ம் ஆண்டு வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். மெரினா கடற்கரையில் 2.21 ஏக்கர் பரப்பில் ரூ.39 கோடியில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

50 ஆண்டு கால திமுக தலைவர், தனது 14 வயதில் இந்தி திணிப்பு எதிர்த்து போராடியவர். நினைவிடத்தில் ‘ஓய்வெடுக்கமால் உழைத்தவர் இங்கே ஓய்வு கொண்டிருக்கிறார்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. கருணாநிதி நினைவிட பகுதியில் கலை, இலக்கியம், அரசியலில் முத்திரை பதித்ததின் அடையாளமாக கருணாநிதியின் நினைவிடத்தில் மூன்று வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி சதுக்கத்திற்கு கீழே நிலத்தடி பகுதியில் கலைஞர் உலகம் என்ற பெயரில் பிரம்மாண்டமாக அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை அரிந்து கொள்ளும் வகையில் 3D, 7D வகைகளில் அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர்கள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள்.

நினைவிட திறப்பு விழாவிற்கு தோழமைக் கட்சிகள், எதிர்க்கட்சிகள், கூட்டணி கட்சிகள், அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் சட்டப்பேரவையில் அழைப்பு விடுத்து இருந்தார். தொண்டர்கள், பொது மக்கள் நினைவிட திறப்பு விழாவை பார்ப்பதற்காக அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்தில் அவர்களுக்கென்று எல்இடி திரை அமைக்கப்பட்டு நாற்காலிகள் போடப்பட்டுள்ளது.

இந்த விழாவில் கலந்துகொள்ள கி வீரமணி , ஜி.கே மணி, முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர். மேலும் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டுள்ளார். இந்த விழாவில் கலந்து கொண்டு, நினைவிடங்களை திறந்துவைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன், கே.என்.நேரு,  ஐ.பெரியசாமி, சேகர் பாபு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் வருகை தந்தனர்.

இந்த விழாவின் தொடக்கத்தில், முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் புகழை பறைசாற்றும் விதத்திலும், நினைவிடத்தின் புகழை கூறும் வகையிலும் காணொலி காட்சி ஒன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குரலில் ஒலிபரப்பப்பட்டது. இதனைத்தொடர்ந்து, மறுசீரமைக்கப்பட்ட அண்ணா நினைவிடத்தையும், முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நினைவிடத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி திறந்துவைத்தார்.

Tags :
Advertisement