ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் - ஜூலை 7ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை!
ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பள்ளிகளுக்கு ஜூலை 7 ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
08:25 AM Jul 05, 2025 IST | Web Editor
Advertisement
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டம் அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோவிலின் உபகோயிலான சிறியமலை அருள்மிகு யோக ஆஞ்சநேய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த நிலையில் ஆஞ்சநேயர் கோயில் குடமுழக்கு விழா வரும் ஜூலை 7 ம் தேதி நடைபெறுகிறது.
Advertisement
இதனை முன்னிட்டு சோளிங்கர் வட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் ஜூலை 7ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உத்தரவிட்டுள்ளார். மேலும் அதனை ஈடுசெய்யும் வகையில் 19-07-2025 (சனிக்கிழமை) அன்று வேலை நாளாக அறிவித்துள்ளார்.