For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"அனிருத் வேற லெவலில் பாடல்களை தருகிறார்" - புகழ்ந்து தள்ளிய #JuniorNTR

03:44 PM Sep 20, 2024 IST | Web Editor
 அனிருத் வேற லெவலில் பாடல்களை தருகிறார்    புகழ்ந்து தள்ளிய  juniorntr
Advertisement

ஹீரோவுக்கான பாடல், மெலோடி பாடல் எதுவாக இருந்தாலும் சரி அனிருத் வேற லெவலில் தருகிறார் என நடிகர் ஜூனியர் என்டிஆர் தெரிவித்துள்ளார்.

Advertisement

டோலிவுட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு பின் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தேவாரா’. இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. இதில் ஜான்வி கபூர், சைப் அலிகான், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் மூலம் ஜான்வி கபூர் தென்னிந்திய திரையுலகில் கதாநாயகியாக கால் பதிக்கவுள்ளார். யுவசுதா ஆர்ட்ஸ்ட் மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ்ட் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் 3 பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றன. இத்திரைப்படம் இந்த மாதம் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்துக்கொண்ட ஜூனியர் என்டிஆர் பேசியதாவது, "இசை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அனிருத் மிகவும் அற்புதமான திறமை கொண்டவர். ஹீரோவுக்கான பாடல், மெலோடி பாடல் எதுவாக இருந்தாலும் அவர் வேற லெவலில் தருகிறார். திறமை இல்லை என்றால் இவ்வளவு சூப்பர் ஹிட் பாடல்களை அவரால் தந்திருக்க முடியாது. இந்தியாவில் பலரும் அவரது இசையை விரும்புகிறார்கள்.

தென்னிந்தியாவில் இளையராஜா, கீரவாணி, ரஹ்மான் போன்ற பல சிறப்பான இசையமைப்பாளர்கள் உள்ளனர். தற்போது, அனிருத் இந்த இடத்தைப் பிடித்துவிட்டார். அனிருத் மெதுவாக இந்தியாவின் ஏ.ஆர்.ரஹ்மானாக மாறிவருகிறார். தேவரா படத்தின் பாடல்களைக் கேட்டிருப்பீர்கள். அவரது இதயத்தையும், ஆன்மாவையும் கொண்டு இசையமைத்துள்ளார்."

இவ்வாறு ஜூனியர் என்டிஆர் தெரிவித்தார்.

Tags :
Advertisement