For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அனில் அம்பானி நிறுவனங்களுக்கு #StockMarket-ல் 5 ஆண்டுகள் தடை!

02:03 PM Aug 23, 2024 IST | Web Editor
அனில் அம்பானி நிறுவனங்களுக்கு  stockmarket ல் 5 ஆண்டுகள் தடை
Advertisement
இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய அனில் அம்பானிக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து செபி  உத்தரவிட்டுள்ளது.
முதலீட்டாளர்களின் நிதியை அனில் அம்பானி தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதை அடுத்து, இந்திய பங்கு சந்தையில் வர்த்தகம் செய்ய அனில் அம்பானியின் நிறுவனம் உள்ளிட்ட 24 நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகள் செபி அமைப்பு தடை விதித்துள்ளது.
மேலும் அனில் அம்பானிக்கு ரூ.25 கோடி அபராதமும், அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்திற்கு ரூ.6 லட்சமும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. தொழிலதிபர்கள் பாப்னாவுக்கு ரூ.27 கோடியும், சுதால்கருக்கு ரூ.26 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பங்குசந்தையில் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவன பங்குகளுக்கு 6 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு, பங்குச்சந்தையில் உள்ள எந்த நிறுவனத்திலும், இயக்குனராகவோ, நிர்வாகத்திலோ அனில் அம்பானி இருக்கக் கூடாது என செபி உத்தரவு பிறப்பித்துள்ளது
Advertisement
Tags :
Advertisement