நிலக்கோட்டை மாரியம்மன் கோயிலில் வெகுவிமரிசையாக நடைபெற்ற பூப்பல்லக்கில் அம்மன் பவனி விழா!
07:45 AM Mar 21, 2024 IST 
                    | 
                            Web Editor
                
                 
    
                
                
     
            
    
             
            
அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் எழுந்தருளி அம்மன் பக்தர்களுக்கு அருள்
பாலித்தார். பூப்பல்லக்கில் அம்மன் பவனியில் வரும்பொழுது நாதஸ்வரம் இசை, உறுமி
இசை, மற்றும் பறையிசை ஒன்றிணைந்து மூன்று இசைகளும் முழங்க பாரம்பரியத்துடன் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில்
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பூப்பல்லக்கில் வீதி உலா வந்த
அம்மனை தரிசித்தனர். சுமார் 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பூ பல்லக்கு ஊர்வலத்தின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    
    
         
        
    
    
    
        
        
         
    
      
    
                 Advertisement 
                
 
            
        நிலக்கோட்டை அருள்மிகு மாரியம்மன் கோயிலின் பங்குனி உற்சவ திருவிழாவின் முக்கிய நிகழ்வான மல்லிகை பூ பல்லக்கில் அம்மன் பவனி விழா பாரம்பரிய இசைகளுடன் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
                 Advertisement 
                
 
            
        திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த நிலக்கோட்டை அருள்மிகு மாரியம்மன் கோயில். இக்கோயிலின் முக்கிய திருவிழாக்களில் ஒன்று பங்குனி உற்சவ விழா. திருவிழாவின் முக்கிய நிகழ்வான மல்லிகை பூப்பல்லக்கில் அம்மன் பவனி வரும் நிகழ்வு இன்று நடைபெற்றது. கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி பங்குனி உற்சவ விழா சாட்டப்பட்டது. இதனையடுத்து கடந்த 8 ஆம் தேதி பூச்சொரிதல் உடன் கொடியேற்றம் நடைபெற்றது. இதனையடுத்து நாள்தோறும் பல வேடங்களில் எழுந்தருளி அம்மன் பொதுமக்களுக்கு அருள் பாலித்தார்.
அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் எழுந்தருளி அம்மன் பக்தர்களுக்கு அருள்
பாலித்தார். பூப்பல்லக்கில் அம்மன் பவனியில் வரும்பொழுது நாதஸ்வரம் இசை, உறுமி
இசை, மற்றும் பறையிசை ஒன்றிணைந்து மூன்று இசைகளும் முழங்க பாரம்பரியத்துடன் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில்
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பூப்பல்லக்கில் வீதி உலா வந்த
அம்மனை தரிசித்தனர். சுமார் 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பூ பல்லக்கு ஊர்வலத்தின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
 Next Article   
         
 
            