"பழங்காலப் பொக்கிஷங்களுக்கு மத்தியில், வரலாறு உயிர் பெறுவதை உணர்ந்தேன்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
காலத்தால் அழியாத பழங்காலப் பொக்கிஷங்களுக்கு மத்தியில், வரலாறு உயிர் பெறுவதை உணர்ந்தேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
07:22 AM Sep 02, 2025 IST
|
Web Editor
Advertisement
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஜெர்மனி சென்றுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஜெர்மனி பயணத்தில் ரூ.3,201 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஜெர்மனியின் டசல்டார்ஃப் நகரத்தில் VINTAGE கார் அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
Advertisement
"இந்தியாவின் டெட்ராய்ட் நகரமான சென்னையில் இருந்து, ஜெர்மனிக்கு பயணம் செய்தபோது, உலகின் முதல் காரையும், ஒரு புகழ்பெற்ற பந்தய காரையும் அருகில் பார்க்கும் அரிய மகிழ்ச்சி எனக்குக் கிடைத்தது. காலத்தால் அழியாத பழங்காலப் பொக்கிஷங்களுக்கு மத்தியில், வரலாறு உயிர் பெறுவதை உணர்ந்தேன்" என்று தெரிவித்துள்ளார்.
Next Article