Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சட்டப்பேரவையில் அமளி: அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்!

10:38 AM Jun 21, 2024 IST | Web Editor
Advertisement

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக, பாமக, பாஜக ஆகிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.  தொடர் அமளியில் ஈடுபட்டதால் அதிமுகவினர் வெளியேற்றப்பட்டனர். 

Advertisement

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 49 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்தச் சம்பவம் தொடர்பாக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், இன்று (ஜூன் 21) சட்டப்பேரவையில் நீர்வளத்துறை, வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டது.  மேலும், இன்றைய கூட்டத்தில் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு அதிமுக சார்பில் கடிதம் அளிக்கப்பட்டது.

இந்தச் சூழலில், கள்ளக்குறிச்சி சம்பவத்தில் மாநில அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் கறுப்புச் சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்தனர். மேலும், சட்டப்பேரவையில் கள்ளக்குறிச்சி விவகாரத்தை எழுப்புவது தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் தனது அறையில் எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் வழக்கம் போல்  காலை 10 மணிக்கு தொடங்கியது. கேள்வி நேரம் ஆரம்பிக்கும் போதே அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் பிரச்னையை எழுப்பினர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசம், முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என முழக்கம் எழுப்பப்பட்டது. இதனால் சட்டசபையில் கூச்சல் குழுப்பம் உருவானது. சபாநாயகர் அப்பாவு குறுக்கிட்டு உறுப்பினர் அமைதி காக்க வலியுறுத்தினார். ஆனால் தொடர்ந்து அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் பிரச்னை எழுப்பியதால் அமளியானது.

தொடர்ந்து கேள்வி நேரம் முடிந்ததும் கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து விவாதிக்கலாம் என சபாநாயகர் அப்பாவு கூறினார்.  ஆனால், அவற்றை ஏற்றுக்கொள்ளாமல் அதிமுக உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கை முன் தர்ணா செய்தனர்.  இதையடுத்து சபாநாயகர் அவர்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, அவைக் காவலர்கள் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட உறுப்பினர்களை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர். 

Tags :
ADMKassemblyAssembly SessionBJPcpicpmDMKHooch LiquorKallakurichiKarunapuramNews7Tamilnews7TamilUpdatesSpeaker AppavuSpurious liquorTN AssemblyVCK
Advertisement
Next Article