"நான் உங்களை கேட்டுக்கிறதெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான்" - தவெக தொண்டர்களுக்கு விஜய் போட்ட அன்பு கட்டளை!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பூத் கமிட்டி முகவர்கள் கருத்தரங்கு அக்கட்சியின் தலைவர் விஜய் கோவையில் கடந்த 26,27ம் தேதி நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக விஜய் ரோடு ஷோ சென்றபோது தொண்டர்கள் சிலர் அவரின் வாகனத்தின் மீது குதித்தனர். மேலும், அவரின் காரை பின் தொடர்ந்து சென்றபோது விபத்தும் ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் அக்கட்சியின் தொண்டர்களுக்கு அன்பு கட்டளை ஒன்றை போட்டுள்ளார்.
இதுகுறித்து தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
"என் நெஞ்சில் குடியிருக்கும் என் உயிரினும் மேலான தோழர், தோழியர் அனைவருக்கும் வணக்கம். மூன்று தினங்களுக்கு முன், கோவையில் நடைபெற்ற நம் தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச் சாவடி முகவர்களின் கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்த என்னை உங்கள் அளவு கடந்த அன்பால் நனைய வைத்தீர்கள்! I love you Kovai and Kongu Thangams.
நம் மீது இத்தனை அன்பைக் காட்டும் உங்களுக்கும் மக்களுக்கும், உண்மையான மக்களாட்சியையும் உண்மையான ஜனநாயக அதிகாரத்தையும் மீட்டுத் தருவதுதான் நாம் காட்டும் அன்புக் காணிக்கையாக இருக்கும். 2026 சட்டமன்றத் தேர்தல் வெற்றியால் இதை நிச்சயம் நிறைவேற்றிக் காட்டுவோம். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் தமிழ்நாடெங்கும் உள்ள நம்முடைய இளம் தொண்டர்களுக்கு என்னுடைய அன்பு வேண்டுகோள்கள் சில உண்டு. அவை அன்புக் கட்டளைகளாகவும் இருக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை.
நம்முடைய இளைய தொண்டர்கள், நமது வாகனங்களை இரு சக்கர வாகனங்களில் தலைக் கவசமின்றி வேகமாகப் பின்தொடருவது, பாதுகாப்புக் குழுவினரை மீறி வாகனத்தின் மீது ஏறுவது, குதிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டது எனக்கு மிகவும் கவலையை அளித்தன. அதனால் இப்போது கொஞ்சம் உங்ககிட்ட மனசு விட்டு பர்சனலா பேச விரும்புகிறேன்… நம் பயணத்தின் போது ஆம்புலன்ஸ் வந்ததும் அதற்கு வழி சரிபண்ணிவிட்ட உங்களுடைய செயலை பாராட்டியே ஆகணும்… அதுதான் நீங்க… இப்டில்லாம் செய்யும் நீங்க, அன்பின் காரணமா செய்கிற சிலதையும் சொல்லி ஆகணும்… உங்களோட அன்ப புரிஞ்சுக்கிறேன் ஃப்ரெண்ட்ஸ்…
என் நெஞ்சில் குடியிருக்கும் என் உயிரினும் மேலான தோழர், தோழியர் அனைவருக்கும் வணக்கம்.
மூன்று தினங்களுக்கு முன், கோவையில் நடைபெற்ற நம் தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச் சாவடி முகவர்களின் கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்த என்னை உங்கள் அளவு கடந்த அன்பால் நனைய வைத்தீர்கள்! I love you…
— TVK Vijay (@TVKVijayHQ) April 30, 2025
அதுக்கு நான் தலைவணங்கவும் செய்கிறேன்… ஆனா எப்பவும் நம்மளுடைட அன்பை வெளிப்படுத்துற விதம், அதீதமாகவே இருந்தாலும் அது மத்தவங்களுக்கு முன்னுதாரணமாத்தான் இருக்கணும்… எல்லாத்துக்கும் மேல் உங்களுடைட பாதுகாப்புதான் எனக்கு ரொம்ப முக்கியம்… நீங்கதான் எனக்கு precious… இவ்ளோ அன்போட இருக்கிற நீங்க எனக்குக் கிடைத்தற்கு நான் என்ன தவம் செய்தேன் என்று எனக்குத் தெரியவில்லை… உங்களை நான் கை கூப்பித் தலைவணங்கிக் கேட்டுக்கிறதெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான்… உங்க அன்ப நான் மதிக்கறேன்… இனி எப்பவும் மதிப்பேன்… அதேபோல நீங்களும் என்மேல அன்போட இருக்கறது உண்மை என்றால் எப்பவும் இதுபோல இனி நீங்க செய்யவே கூடாது…
நான் இங்கே சொல்லி இருக்கிற மாதிரி, இத நீங்க கட்டளையாகவோ கண்டிப்பாகவோ கூட எடுத்துக்கங்க…தப்பே இல்ல… நம்ம அரசியல்ல கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோட கண்டிப்பும் self discipline-ம் 100% சமரசமற்றதாத்தான் இருக்கணும் ஃப்ரெண்ட்ஸ்… அதுதான் நம்ம அரசியலுக்கும் நல்லதுன்னு உங்களுக்கே தெரியும்... இனி அடுத்தடுத்து நம் மக்களை சந்திக்கிற நிகழ்ச்சிகள் எல்லாம் இருக்கறதால நான் சொல்வதை நீங்கள் இனிமே ஸ்ட்ரிக்ட்டா ஃபாலோ செய்வீங்கன்னு நம்புறேன்… செய்வீங்க… செய்றீங்க… ஓகே?... Thank u friends…. Love you all…"
இவ்வாறு தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.