For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் பிரிவா? புகைப்படத்தால் மீண்டும் எழுந்த சர்ச்சை!

09:57 PM Jul 13, 2024 IST | Web Editor
ஐஸ்வர்யா ராய்   அபிஷேக் பச்சன் பிரிவா  புகைப்படத்தால் மீண்டும் எழுந்த சர்ச்சை
Advertisement

ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் அபிஷேக் பச்சன் தனது குடும்பத்தினருடனும், ஐஸ்வர்யா ராய் தனது மகளுடனும் தனித்தனியாக புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதால் இவர்களின் விவாகரத்து சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது.

Advertisement

1997 ம் ஆண்டில் வெளியான 'இருவர்' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இதனையடுத்து 'ஜீன்ஸ்', 'கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்', 'ராவணன்', 'எந்திரன்' படங்களில் நடித்திருந்தார்.  பாலிவுட்டிலும் கொடி கட்டி பறந்தார். 2007ல் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

நடிகை ஐஸ்வர்யா ராய் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் நடித்திருந்தார். 'பொன்னியின் செல்வன்' படத்தில் ஐஸ்வர்யா ராயின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.  இதனிடையே, அபிஷேக் பச்சனும் ஐஸ்வர்யா ராயும் விவாகரத்து செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.  ஆனால், அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இணைந்து சில நிகழ்ச்சிகளுக்குச் சென்று அந்த தகவலைப் பொய்யாக்கினர். இந்த நிலையில், ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் அமிதாப் பச்சன் தன் குடும்பத்தினருடன் கலந்துகொண்டார். அப்போது, அவர்களுடன் அபிஷேக் பச்சன் மட்டும் இருந்தார்.  அதேநேரம்,  அந்த திருமண நிகழ்வுக்கு வந்த ஐஸ்வர்யா ராய் தனது மகளுடன் அபிஷேக் பச்சன் இல்லாமல் புகைப்படத்திற்கு நின்றிருக்கிறார். இதனால், இவர்களின் விவாகரத்து சர்ச்சை மீண்டும் எழுந்தது. அதே நேரத்தில் இந்நிகழ்வின் போது வேறு சில இடங்களில் ஐஸ்வர்யா ராய்யும், அபிஷேக் பச்சனும் சேர்ந்து நிற்கும் புகைப்படங்கள் வெளியானாது. இந்நிலையில் ஏன் பொய்யான தகவல்களை பறப்புகிறீர்கள் என இணையவாசிகளில் ஒரு தரப்பினர் கோவப்படவும் செய்கின்றனர்.

Tags :
Advertisement