Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னையில் இருந்து அயோத்திக்கு விமான சேவை!

03:30 PM Jan 13, 2024 IST | Web Editor
Advertisement

சென்னையில் இருந்து அயோத்திக்கு அடுத்த வாரம் முதல் விமான சேவை தொடங்கப்பட உள்ளதாக சென்னை விமான நிலைய நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Advertisement

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை விழா வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள்,  பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர். பாஜகவைச் சார்ந்தவர்கள் மட்டுமல்லாது, எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திரைத்துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.  இவ்வாறு சன்னியாசிகள், மடாதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் என மொத்தம் 8,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து மக்கள் அயோத்தி ராமர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவர்கள் வசதிக்கு ஏற்ப தமிழ் உள்ளிட்ட 28 மொழிகளில் பெயர் பலகையை அயோத்தி மாவட்ட நிர்வாகம் வைத்துள்ளனர். இந்த பலகையில் 28 மொழிகளில் – 22 இந்திய மற்றும் 6 வெளிநாட்டு மொழிகளில் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் இருந்து அடுத்த வாரம் முதல் அயோத்திக்கு விமான சேவை தொடங்க இருப்பதாக சென்னை விமான நிலைய நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த விமான சேவையை ராமர் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் சென்னையில் இருந்து லட்சத்தீவு பகுதிகளுக்கும் விமான சேவை தொடங்கப்படும் என்றும் லட்சத்தீவில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் இந்த விமான சேவை தொடங்கப்படுவதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
AyodhyaayothiBJPChennaiNews7Tamilnews7TamilUpdatesPMO IndiaRam LallaRam Mandirram templeRamJanmbhoomi
Advertisement
Next Article