Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

டெல்லியில் காற்று மாசு கடுமையாக அதிகரிப்பு! நடைபயிற்சியை தவிர்க்க சுகாதாரத்துறை கோரிக்கை!

04:11 PM Nov 11, 2023 IST | Web Editor
Advertisement

டெல்லியில் காற்று மாசு கடுமையாக உயர்ந்துள்ளதால், அங்கு நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என டெல்லி சுகாதாரத்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Advertisement

தலைநகர் டெல்லியில் காற்றுமாசு கடுமையாக அதிகரித்துள்ளது.  மக்கள் சுவாசிக்கவே சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.  தலைநகரில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.  அதோடு டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களில் உள்ள விளைநிலங்களில் பயிர் எச்சங்களை விவசாயிகள் எரிப்பதால் டெல்லியை புகை மூட்டங்கள் சூழ்வது வழக்கமாக உள்ளது.

இதனை தடுக்க டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களில் பயிர் எச்சங்களை விவசாயிகள் எரிக்கக் கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காற்று மாசை எதிர்கொள்ளும் வகையில் டெல்லி வாழ் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து டெல்லி சுகாதாரத்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

டெல்லி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

காற்றின் தரக்குறியீடு பூஜ்ஜியத்திற்கும் 50க்கும் இடைப்பட்ட அளவில் இருந்தால் அது நல்லது.

காற்றின் தரக்குறியீடு 51 - 100  அளவு இருந்தால் திருப்திகரமானது.

காற்றின் தரக்குறியீடு 101 - 200 அளவு இருந்தால் மிதமானது.

காற்றின் தரக்குறியீடு 201 - 300  அளவு இருந்தால் மோசம்.

காற்றின் தரக்குறியீடு 301 - 400 அளவு இருந்தால் மிகவும் மோசமானது.

காற்றின் தரக்குறியீடு 401 - 450  அளவு இருந்தால் கடுமையானது.

காற்றின் தரக்குறியீடு 450க்கு மேல் இருந்தால் மிகவும் கடுமையானது.

இந்நிலையில், இன்று (11.11.2023) காலை 7 மணியளவில், டெல்லி நகரின் காற்றின் தரக் குறியீடு 219 ஆக இருந்தது.

Tags :
Air pollutionAir Quality IndexAQIavoid exercisingavoid walkingCAQMDelhidelhi air pollutionharyananews7 tamilNews7 Tamil UpdatesOdd Even Vehicle SystemPregnant WomenPunjabWalking
Advertisement
Next Article